Friday, January 27, 2017

22 interesting facts in the world

AMAZING!

NOKIA 6

GHOST - very funny horror

ஜல்லிக்கட்டு புரட்சி கர்நாடகாவிலும் பரவியது.. கம்பாலா போட்டி கேட்டு வீதிக்கு வந்த மாணவர்கள்

பெங்களூர்: கம்பாலா போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகாவில் பெரிதாக வெடித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு வெடித்ததை போன்ற புரட்சி கர்நாடகாவில் கம்பாலாவுக்காக மாணவர்கள் மத்தியில் வெடித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் நடுவே வெடித்த யுக புரட்சி உலகையே உற்று பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டு சட்டம் அவர்களுக்கு பரிசாக கிடைத்தது. இந்த போராட்டமும், அதன் ஒழுங்கு மற்றும் அதன் வெற்றி என்பது நாடு முழுக்க உள்ள இளைஞர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டமும், அதன் ஒழுங்கு மற்றும் அதன் வெற்றி என்பது நாடு முழுக்க உள்ள இளைஞர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவிலும் இதேபோல தங்கள் மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக இளைஞர்கள் வீதிக்கு வர ஆரம்பித்துள்ளனர். 

கர்நாடகா இப்போது இதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது. இம்மாநிலத்தில் விலங்கு நல அமைப்புகளால் தடைக்கு உள்ளாகியுள்ள கம்பாலா எனப்படும், எருமை மாடு விரட்டும் போட்டிக்கு அனுமதி கேட்டு மாநிலம் முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன.